பொன்மொழிகள்-30

செல்வம் பல நண்பர்களைக் கொண்டு வருகிறது.
துன்பம் அவர்கள் எத்தகையவர்கள் என்று காட்டுகிறது.

******
குற்றத்தை சாமர்த்தியத்தால் அழிக்க முடியாது.

அனுதாபத்தால் அழித்து விடலாம்.

******
பந்தயம் கட்டும் பழக்கம்
,
பேராசையின் குழந்தை
;பெரிய இடரின் தந்தை.
******
அதிக ஊக்கமும் குறைந்த வேலையும் உடையவர்களே
,
சண்டைக்காரர்களாக இருக்கிறார்கள்.

******
உலகை அறிந்தவன் வெட்கப்பட மாட்டான்.

தன்னை அறிந்தவன் ஆணவம்
  கொள்ள மாட்டான்.
******
'அதிர்ஷ்டம்'தராததை 'திருப்தி'யால் பெறலாம்.
******
நீதியைவிட நியாயமாக நடந்து கொள்வதற்குப் பெயர் அன்பு.

******
மனிதர்கள் சில சமயம் உண்மை மீது இடறி விழுவதுண்டு.

ஆனால் பெரும்பாலானோர் எழுந்து நின்று ஏதும்

நடவாதது போல அவசரமாகப் போய்விடுகிறார்கள்.

******
உங்களது கௌரவம் உங்கள் நாக்கு நுனியில் உள்ளது.

******
விரோதம் என்பது மறைந்திருக்கும் வியாதி.

******
மன நிறைவு என்பது இயற்கையான செல்வம்
;
ஆடம்பரம் என்பது வலிந்து தேடும் வறுமை.

******
ஒரு தீமையை ஊட்டி வளர்ப்பது

இரண்டு குற்றக் குழந்தைகளை உற்பத்தி செய்யும்.

******
அலங்காரம் செய்வதனால் அகங்காரம் வளரும்
;
ஆடம்பரம் செய்வதனால் ஆணவம் ஓங்கும்.

எளிமையின் மூலமே எதையும் வெல்லும் மனத்திண்மை வளரும்.

******
எச்சரிக்கை உணர்வு ஒருபோதும் தவறுக்கு துணை நிற்பதில்லை.

******