விடுகதைகள்

1.கடித்தால் கடிபடாது.
பிடித்தால் பிடிபடாது.அது என்ன?
******
2.முள்ளு முள்ளாய் இருக்கும்,பலாக்காயுமல்ல ;
உள்ளே பழுத்திருக்கும்,பாகற்காயுமல்ல;
உருக்கினால் நெய் வடியும்,வெண்ணெயும்  அல்ல.அது என்ன?

******

3.இரவெல்லாம் பூங்காடு;

பகலெல்லாம் வெறுங்காடு.அது என்ன?

******

4.அட்டைக்கு ஆயிரம் கண்கள்;

முட்டைக்கு மூன்று கண்கள்;

அயோத்தி ராமனுக்கு ஒரே கண்.அது என்ன?

******

5.மஞ்சக் குருவி ஊஞ்சலாடுது.அது என்ன?

******

6.ஒரு வீட்டுக்கு இரண்டு வாசல்.அது என்ன?

******

7.உடம்பில்லாதவன் ஊரெல்லாம் போவான்.அது என்ன?

******

8.தங்க மாம்பழம்.

திங்க முடியல்லே.அது என்ன?

******

9.பிச்சிப்பூ சிதறிக் கிடக்கு.பொறுக்க நாதியில்லே;  

ராசா மகா கோபிச்சுக்கிட்டுப் போறா,அழைக்க நாதியில்லே;

சமுக்காளம் கிழிஞ்சு கிடக்கு,தைக்க நாதியில்லே.அது என்ன?

******

10.கணக்கிலாப் பிள்ளைகளை கழுத்தைச் சுற்றி 

சுமக்கும் தாய்,அது எந்தத் தாய்?

******

விடைகள்:

1.தண்ணீர்.  2.ஆமணக்கு.  3.வானம்.   4.சல்லடை,முட்டை,ஊசி.   5.எலுமிச்சம்பழம்   6.மூக்கு.   7.காற்று,புகை.  8.நெருப்பு.  9.நட்சத்திரங்கள்,நிலா,வானம்.   10.தென்னை