விரும்புவதை எளிதாக அடைய என்ன தேவை?

நாம் விரும்புவதை அடைய ஒரு எளிய வழி உள்ளது.

அந்த வழி நமது மகத்தான ஆழ்மன சக்தியின் மூலமாக விரும்புவதை அடைய துணை புரிகின்றது.

அந்த வழி என்ன என்று கேட்கிறீர்களா? நிற்க.

அது தான் சுய உருவக மாற்றம். (இப்போது உட்காரலாம்!)

நாம் இப்போது உள்ள நிலைக்கு காரணம் நாம் நம்பிக் கொண்டிருக்கும், நாம் ஏற்றுக் கொண்டிருக்கும் நமது சுய உருவகம் தான்.

ஆகவே இந்த தற்போதைய சுய உருவகத்தை வைத்துக் கொண்டு நமது குறிக்கோளை விரும்புவதை அடைய முடியாது.

ஏனென்றால் நமது தற்போதைய அதிர்வுக்கும், நமது குறிக்கோளுக்கான அதிர்வுக்கும் இடைவெளி உள்ளது, தொலைவு உள்ளது.

அப்படியென்றால் விரும்புவதை அடைபவர்களும், குறிக்கோளை தொடுபவர்களும் இது போல் எங்காவது மூலையில் உட்கார்ந்து கொண்டு சுய உருவகத்தை மாற்றி கொண்டு தான் சாதிக்கிறார்களா என யாராவது நண்பர்கள் பின்னூட்டத்தில் கேட்கலாம்.

விஷயமென்னவென்றால் நமது குறிக்கோளை அடைய நாம் எடுக்கும் செயல்பாடுகள் தன்னிச்சையாகவே நமது சுய உருவகத்தை மாற்றி விடுகிறது.

அதற்கு பதிலாக சுய உருவகத்தை முதலில் மாற்ற முனைந்தால் அதுவே நம்மை நம் குறிக்கோளை நோக்கி சரியான வழியில் வேகமாக செயல்பட வைக்கும்.
தகுந்த சூழ்நிலைகளையும், மனிதர்களையும் நம்மிடம் சேர்க்கும்.

நம் லட்சியத்தை எளிதாக அடைய வழி வகுக்கும்!