எண்ணஙகளின் ஆற்றல்!

எண்ண ஆற்றல்களைப் பற்றி அனைவரும் அறிவோம்.

எண்ணங்கள் எவவளவு சக்தி படைத்தன, எண்ணஙகள் நமது வாழக்கையை கட்டுப்படுத்துவன என ஞானிகள் மற்றும் அறிஞர்கள் சொல்வதை கேட்டிருக்கிறோம்.

ஆகவே நாம் எண்ணங்களை கண்காணிக்க பழக வேண்டும்.

நாம் நமது எண்ணங்களை தொடர்ந்து ஆராய்ந்து வந்தால் விரைவில் நாமும் அறிஞர்களாக திகழலாம் என்றார் அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

கவலை, பயம், பொறாமை, சினம் முதலிய தீய எண்ணங்களை கவனித்து ஒதுக்க வேண்டும்.

பழக்கத்தில் வரும் இந்த எண்ணஙகளை விழிப்புணர்வுடன் கண்டு கொண்டு அதற்கு பதிலாக நல்ல எண்ணங்களை எண்ணி வர வேண்டும்.

இதனை ஒரு பயிற்சியாக செய்து வரலாம்.

தீய எண்ணஙகள் நமக்கும் நமது சூழ் நிலைக்கும் தீமை பயக்கும் என்பதை உணர வேண்டும்.

அடுத்தவருக்கு நாம் நன்மை நினைப்பது நமக்கும் நன்மை தரும் என்பதை அறிய வேண்டும்.

எண்ணங்கள் மிகுந்த ஆற்றல் வாய்ந்தவை என்பதையும் அவை அவற்றுக்கு ஒப்பான சூழ்நிலைகளையும், மனிதர்களையும் ஈர்க்க வல்லன என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே நமக்கும் மற்றவர்களூக்கும் நல்லதையே நினைப்போம். நல்லவற்றையே பெறுவோம்!!