சேலை வியாபாரம்

அத்தினத்துக்கும் ஓட்டகைக்கும்  ஆயிரம் காதம்.
ஆனாலும் நடக்குது சேலை வியாபாரம்.

இக்கவிதையில் அத்தினம் என்பது பாண்டவர்கள்  ஆண்ட ஹஷ்தினாபுரத்தையும் ஓட்டகை என்பது கண்ணன் ஆண்ட துவாரகாபுரியையும் குறிக்கிறது.(ஓட்டை=துவாரம்)

அதாவது இரு நகரங்களுக்கிடையே ஆயிரம் காதம் தூரம்.இருந்தபோதும் திரௌபதி ஹஷ்தினாபுரத்தில் மானபங்கப் படுத்தப்பட்டபோது துவாரகாபுரியிலிருந்த கண்ணன் சேலை கொடுத்தாரே.அதைத்தான் இக்கவிதை விளக்குகிறது.