கண்கள் மூடியே காண வேண்டும்.......!

அடுத்த நிமிடம் நினைக்கும் போது
அப்பப்பா இனிக்கிறது

அழகு கவிதையாய் நான் மாற

அவன் விழிகள் படிக்கிறது

இனிய வாழ்க்கைக் கவிதையே - உன்


முதல் புள்ளியை தொடங்கிவிடு

முற்றுப் புள்ளியை தொலைத்துவிடு....

மீட்டும் போது வீணையாக வேண்டும்

மீண்டும் மீண்டும் குழந்தையாக வேண்டும்

பேச்சே இன்றிப் பேச வேண்டும் - தினம் தினம்

கண்கள் மூடியே காண வேண்டும்.......!