Showing posts with label தமிழின் இனிமை. Show all posts
Showing posts with label தமிழின் இனிமை. Show all posts

ஓரெழுத்து வார்த்தை

தமிழில் உள்ள ஓரெழுத்து வார்த்தைகளும் பொருளும்;
அ =எட்டு             ஆ =பசு            ஈ =ஒரு பூச்சி             உ =சிவன்         ஊ =தசை
ஐ =ஐந்து               ஓ=மதகு நீர் தாங்கும் பலகை       கா =சோலை    கு =பூமி
கூ =பூமி               கை =கரம்      கோ =அரசன்           சா =இறப்பு
சே =அழிஞ்சில் மரம்                சோ =மதில்              தா =கொடு       
து =பறவை இறகு               தே =நாயகன்                 தை =ஒரு மாதம்
நா -நாக்கு           நௌ =மரக்கலம்              பா =பாட்டு               பூ =மலர்   
வை =வைக்கோல்         பே =மேகம்          பை =பாம்புப் படம்          மா =மாமரம்
மீ= ஆகாயம்       மூ =மூன்று            மை =அஞ்சனம்             யா =அகலம் 
வீ=பறவை           தீ =நெருப்பு            து= உணவு

சாப்பாடு

சாப்பிடுவது குறித்து தமிழில் எத்தனை நுட்பமான வார்த்தைகள்?
அருந்துதல்   =மிகச்சிறிய அளவில் உட்கொள்ளுதல் (மருந்து)
உண்ணல      =பசி தீர உட் கொள்ளல்
உறிஞ்சல்     =வாயைக் குவித்து நீரியல் பண்டங்களை இழுத்தல் 
குடித்தல்       =சிறிது சிறிதாக பசி நீங்க உட்கொள்ளல்(கஞ்சி)
தின்னல்        =சுவைக்காக ஓரளவு தின்னுதல்(முறுக்கு)
துய்த்தல்       =சுவைத்து மகிழ்ந்து உட்கொள்ளல்
பருகல்           =நீரியல் பண்டங்களை சிறிது சிறிதாகக் குடித்தல்
விழுங்கல்    =பல்லிற்கும் நாவிற்கும் வேலையின்றி தொண்டை வலி உட்கொள்ளல் (மாத்திரை)

பேசுதல்

தமிழில் பேசுதலைக் குறிக்க உள்ள வார்த்தைகள்;
பேசுதல்         =பொருள் கெடாமல் பேசுதல்
கூறுதல்        =கூறு படுத்திச் சொல்லுதல்
பகர்தல்         =அழகாகப் பேசுதல்
சொல்லுதல்=தரக் குறைவாகப் பேசுதல்
பொழிதல்     =இனிமையாகப் பேசுதல்
இயம்புதல்   =அழுத்தமாகப் பேசுதல்
அருளுதல்   =தவத்தில் சிறந்தோர் பேசுதல்
அறைதல்     =தொடர்பில்லாமல் பேசுதல்

சிரிப்பவன்

தனக்குள் சிரிப்பவன் ஞானி .
தனக்குத்தானே  சிரிப்பவன்  பைத்தியம்.
தன்னை மறந்து சிரிப்பவன் ரசிகன்.
தன்னை நினைத்துச் சிரிப்பவன் காதலன்.
பிறரைப் பார்த்துச் சிரிப்பவன் கர்வி.
பிறருக்காகச் சிரிப்பவன் கயவன்.
பிறர் நோகச் சிரிப்பவன் கொடியவன்.
பிறர் காணச்சிரிப்பவன் கோமாளி.
சிரித்துக் கொண்டே வெற்றி பெறுபவன் மதியூகி.
வெற்றி பெற்றாலும் சிரிக்காதவன் கர்ம யோகி.

இலைகள்

தமிழில் வெவ்வேறு தாவரங்களின் இலைகளுக்கு வெவ்வேறு பெயர்கள் உண்டு.
வாழை மரம்,அரச மரம்,ஆல மரம்                   --இலை
பூமியில் வளரும் கொடிகளின் இலை           ---பூண்டு
கோரை,அறுகு இவற்றின் இலை                        ---புல்
நெல்,கேழ்வரகு இவற்றின் இலை                   --தாள்
மலையைச் சார்ந்த மரங்களின் இலைகள்  --தழை
சப்பாத்தி,தாழை இவற்றின் இலைகள்          --மடல் 
நாணல்,கரும்பு இவற்றின் இலைகள்            --தோகை
தென்னை,பனை இவற்றின் இலைகள்          --ஓலை
அகத்தி,பசலை இவற்றின் இலைகள்             --கீரை 

கை

தமிழில் 'கை'என்ற வார்த்தை தான் எப்படியெல்லாம் பயன் படுத்தப் படுகிறது!

'கை'கொடுத்தான்.

'கை' கூடி வர வேண்டும்.
'கை' ரொம்ப தாராளம் அவனுக்கு.
கையைக் கடித்து விட்டது.
கையோடு கையாய்
உள்ளங்கை நெல்லிக்கனி.
கை சுத்தமில்லைஅவனுக்கு.
அவனைக் கை கழுவித் தொலை.
கையால் ஆகாதவன்.
கை விட்டு விட்டான்.
எச்சிற்கையால் காக்காய் கூட விரட்ட மாட்டான்.
கையாடல்செய்து விட்டான்.
கையும் ஓடவில்லை,காலும் ஓடவில்லை.
ஒரு கை குறையுது.
அடிக்கிற கை தான் அணைக்கும்.
கைக்கு எட்டியது வாய்க்கு எட்ட வில்லை.
வலது கை கொடுப்பது இடது கைக்குத் தெரியாமல்....
கை மேல் பலன்.
கை நாட்டுப் பேர்வழி.
கையை நனச்சிட்டு வந்தான்.
கையைப் பிடித்தான்.
கை வைக்காதே.

காற்று

காற்று
தெற்கிலிருந்து வீசினால்    --தென்றல்
வடக்கிலிருந்து வீசினால்   --வாடை
கிழக்கிலிருந்து வீசினால்   ---கொண்டல்
மேற்கிலிருந்து வந்தால்     ---மேலை

பூ
மலர்வதால்    --மலர்.
விரிவதால்     ---வீ
பூப்பதால்          --பூ
வாடுவதால்    --அலர்

அத்தான்

அம்மான் சேய் அதாவது மாமாவின் குழந்தை,அம்மாஞ்சி ஆயிற்று.
அத்தை மகன் அத்தான் என்றாயிற்று.
நொய்து என்றால் லேசான என்று பொருள்;அரிசியை விட நொய்தாக இருப்பதால் நொய் அரிசி என்று ஆனது.
அதைவிடச் சிறியது குறு நொய்;அதுவே குருணை ஆயிற்று.
**********
அச்சம் என்பது அஞ்ச வேண்டியவற்றுக்கு அஞ்சுதல் ஆகும்.
மடம் என்பது,அனைத்தும் அறிந்தும்,தெரியாதது போல் அடக்கமாக இருப்பது.
நாணம் என்பது வெட்கம்.
பயிர்ப்பு என்பது பிற ஆடவரின் ஸ்பரிசம் அருவருப்பைத் தருவது ஆகும்.
பெண்ணின் இலக்கணமாக முன்னாளில் கருதப்பட்டவை இவை.