வாழ்வில் உயர வேண்டுமா?...VAAKAI.COM




  1. உண்மை அல்லாதவற்றில் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். உண்மை மீது பிடிப்புள்ளவர்களாக இருங்கள். உண்மை நிச்சயம் வெற்றி பெறும்.

    உண்மையையும், அன்பையும், தூய உள்ளத்தையும் எதுவும் எதிர்த்து நிற்க முடியாது. உண்மையானவர்களாக இருந்தால் யாருக்கும் பயப்பட வேண்டியதில்லை.

    நீ எந்த அளவுக்கு உயர்ந்தவனாக வேண்டுமென நினைக்கிறாயோ, அந்த அளவுக்கு, கடுமையான சோதனைகளைக் கடந்து செல்ல உன்னைத் தயார் ...செய்து கொள்.

    வாழ்க்கையில் அனைத்து தீமைகளையும் எதிர்த்து போரிடு. வெளியில் நடப்பதை மட்டுமல்ல! உனக்குள் ஏற்படும் தீமைகளோடும் போரிட்டுக் கொண்டே இரு.

    உயர்ந்த லட்சியம், தூய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகியவற்றுடன், நேர்மையும் மனிதனுக்கு அவசியம். நேர் வழியிலேயே முன்னேற வேண்டும்.