Showing posts with label மேதைகளின் நகைச்சுவை. Show all posts
Showing posts with label மேதைகளின் நகைச்சுவை. Show all posts

இரவல்

பிரபல நகைச்சுவை எழுத்தாளர் மார்க் ட்வைன்ஒருவரிடம் புத்தகம் ஒன்றை இரவல் கேட்டார்.அதற்கு அந்த நண்பர்,''என் அறையில் படிப்பதாக இருந்தால் தருகிறேன்,''என்றார்.மார்க் ட்வைன் பேசாமல் திரும்பி விட்டார்.சில நாட்கள் கழித்து அதே நண்பர் மார்க் ட்வைனிடம்,''உங்கள் தோட்டத்துக் கடப்பாறையை ஒரு நாள் இரவல் கொடுங்கள்,''என்று கேட்டார்.மார்க் ட்வைன் அமைதியாகச் சொன்னார்,''என் தோட்டத்தில் தோண்டுவதாக இருந்தால் கொடுக்கிறேன்.''
**********
ஒருவர் பெர்னாட்ஷாவைக் கேட்டார்,''ஏன் இப்படி பஞ்சத்தில் அடிபட்ட ஆள் மாதிரி இருக்கிறீர்கள்?''ஷா சொன்னார்,''என்னைப் பார்த்தால் அப்படி இருப்பது உண்மை.ஆனால் பஞ்சம் எப்படி வந்தது என்பது உங்கள் உருவத்தைப் பார்த்தாலே தெரியும்!''
**********
ஒருவர் நேதாஜியிடம் சொன்னார்,''ஆங்கிலேயர்களுடையது சூரியனே அஸ்தமிக்காத சாம்ராஜ்யம்,''நேதாஜி சொன்னார்,''உண்மை.அவர்களை இருட்டில் நடமாடவிட இறைவனுக்கே பயம்.அவ்வளவு பெரிய திருடர்கள்.''

யாரது?

கண்ணதாசன் நண்பர் ஒருவரைப் பார்க்க சென்றார்.அவர் வீட்டுக் கதவு உள்ளே பூட்டப் பட்டிருந்தது.எனவே அவர் கதவைத் தட்டினார்.நண்பர் உள்ளிருந்தவாறே,''யாரது ?''என்று கேட்டார்.கண்ணதாசன் சொன்னார்,''AN OUTSTANDING POET IS STANDING OUT.''

கழுதை வண்டி

ஆங்கில மேதை லாயிட் ஜார்ஜ் ஒரு தேர்தல் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த போது,கூட்டத்தில் ஒருவன்,''உங்கள் தாத்தா கழுதை வண்டி ஓட்டிக்கொண்டிருந்தவர் என்கின்ற செய்தி உங்களுக்குத் தெரியுமா?''எனக் கேலியாகக் கேட்டான்.
லாயிட் ஜார்ஜ் டக்கென்று சொன்னார்,''தெரியும்.தாத்தா ஓட்டியவண்டி கூட வீட்டில் தான் இருக்கிறது.ஆனால் அதில் பூட்டியிருந்த கழுதை தான் காணாமல் போயிருந்தது.அது இப்போது தான் இங்கே இருப்பது தெரிகிறது.''

கல்வி அறிவு

ஒரு முறை ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார்,விஞ்ஞான மேதை ஐன்ஸ்டீன்.பசி மேலீட்டால் ரயில்வே சிற்றுண்டிக்கடைக்கு சென்று உண்ண என்ன இருக்கிரதுஎனக் கேட்டவுடன் வேலையாள் அவரிடம் விலைப் பட்டியலைக் கொடுத்தான்.அப்போது கண்ணாடி அவரிடம் இல்லாதலால்,''நீயே படித்துச் சொல்லேன்,''என்றார்.வேலையாள் சொன்னான்,''அய்யா,நானும் உங்களைப் போல் எழுத்தறிவில்லாதவன் தான்.''

கழுதை வண்டி

ஆங்கில மேதை லாயிட் ஜார்ஜ் ஒரு தேர்தல் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த போது,கூட்டத்தில் ஒருவன்,''உங்கள் தாத்தா கழுதை வண்டி ஓட்டிக்கொண்டிருந்தவர் என்கின்ற செய்தி உங்களுக்குத் தெரியுமா?''எனக் கேலியாகக் கேட்டான்.
லாயிட் ஜார்ஜ் டக்கென்று சொன்னார்,''தெரியும்.தாத்தா ஓட்டியவண்டி கூட வீட்டில் தான் இருக்கிறது.ஆனால் அதில் பூட்டியிருந்த கழுதை தான் காணாமல் போயிருந்தது.அது இப்போது தான் இங்கே இருப்பது தெரிகிறது.''

கல்வி அறிவு

ஒரு முறை ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார்,விஞ்ஞான மேதை ஐன்ஸ்டீன்.பசி மேலீட்டால் ரயில்வே சிற்றுண்டிக்கடைக்கு சென்று உண்ண என்ன இருக்கிரதுஎனக் கேட்டவுடன் வேலையாள் அவரிடம் விலைப் பட்டியலைக் கொடுத்தான்.அப்போது கண்ணாடி அவரிடம் இல்லாதலால்,''நீயே படித்துச் சொல்லேன்,''என்றார்.வேலையாள் சொன்னான்,''அய்யா,நானும் உங்களைப் போல் எழுத்தறிவில்லாதவன் தான்.''

வழிவிடு

பெர்னாட்ஷா ஒற்றையடிப் பாதையில் போய்க் கொண்டிருந்தார்.எதிரே வந்தவன் இவரைப் பார்த்து ஒதுங்கி நின்றான்.
ஷா அவனருகில் வந்து சொன்னார்,''நான் முட்டாள்களுக்கு வழி விடுவதில்லை.''
அவன் மிக மரியாதையாகச் சொன்னான்,'நான் வழி விடுவதுண்டு.'

தெரியுமா?

ஒரு புகழ் பெற்ற சமய நூல் அறிஞர் டாக்டர்.சார்ல்பார்த் என்பவரை நேரில் பார்த்தறியாத ஒரு முதியவர் அவரிடம் கேட்டார்,''ஐயா,உங்கள் பேர் என்ன?''
'என் பெயர் டாக்டர்.சார்ல்பார்த்.'
''இதே பெயரில் ஒரு சமய நூல் அறிஞர் இருக்கிறாரே,அவரை உங்களுக்குத் தெரியுமா?''
'தெரியுமாவா?அவருக்கு தினம் தினம் ஷேவ் செய்து தலை வாரி விடுகிறேன்,ஐயா.'

பலகாரம்

பாரதியார் ஒரு விழாவில் கலந்து கொண்டார்.விழா முடிந்தவுடன் அவர் என்ன சாப்பிட விரும்புகிறார் என்று கேட்டனர்.''வீரப் பலகாரமாக ஏதாவது வாங்கி வாருங்கள்''என்றார் பாரதியார்.நிர்வாகி இதைக் கேட்டு திகைப்படைந்து நின்றார்.பாரதியார் சொன்னார்,''பலகாரங்களில் வீரப் பலகாரம்,கோழைப்பலகாரம் என்றிருப்பது உமக்குத் தெரியாதா?கடபுடா என்று கடிக்கும் பொது ஓசை எழுப்பும் முறுக்கு போன்றவை வீரப் பலகாரங்கள்.ஓசையே இல்லாமல் உள்ளே போகும் வடை போன்றவை கோழைப் பலகாரங்கள்.''

ஒப்புமை

ஐன்ஸ்டீன் கண்டு பிடித்தஒப்புமைத் தத்துவம் புரிந்து கொள்வது கடினம்.ஒரு மாணவி ஐன்ஸ்டீனிடம் அதை அவளுக்கு விளக்குமாறு கேட்டாள்.''அது கடினமானது.உனக்குப் புரியாது.இப்போது உனக்கு அது தேவையும் இல்லை.'' என்றார்.அவளோ கேட்பதாக இல்லை.அவள் பிடிவாதம் கண்டு அவர் சொன்னார்,''நீஒரு அழகான பெண்.உன்னிடம் ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தாலும் அது ஐந்து நிமிடம் போல் தோன்றுகிறது.அதே சமயம் நான் ஒரு கணிதப் பேராசிரியரிடம் ஐந்து நிமிடம் பேசிக் கொண்டிருந்தாலும் அது ஒரு மணி நேரம் போல் தெரிகிறது.இது தான் ஒப்புமைத் தத்துவம்.''

வேஷ்டி

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் ஒரு நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தார்.நாடகத்தில் வந்த சக்கரவர்த்தி தமக்கு எந்தெந்த அரசர்கள் கப்பம் கட்டினார்கள் என்று மந்திரியைக் கேட்டார்.மந்திரி,''வங்க அரசர் தங்கம் கட்டினார்;கலிங்க அரசர் நவமணிகள் கட்டினார்.''என்று வரிசையாக  சொல்லிக் கொண்டே போனார்.சக்கரவர்த்தி திடீரென,'சோழ அரசர் என்ன கட்டினார்?'என்று கேட்க,மந்திரியாக நடித்தவர் விழிக்க,வேலைக்காரராக நின்ற கலைவாணர்,''வேஷ்டி,வேஷ்டி,''என்று சொல்லிக் கொண்டு போக  அனைவரும் சிரித்தனர்.

களைப்பு

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்,ஒருமுறை காரில் தன நண்பர்களுடன்  ஒரு ஊருக்குப் போய்க் கொண்டிருந்தார்.போகும் வழியில் கார் ஒரு புளிய மரத்தில் மோதி  விபத்து ஏற்பட்டது.கார் நசுங்கி அனைவருக்கும் காயம். கலைவாணர் கொஞ்சம் கூடப் பதட்டப் படாமல் அனைவருக்கும் முதலுதவி செய்ய ஏற்பாடு  செய்தார்.ஒருவரை பக்கத்து ஊருக்கு அனுப்பி ஒரு வாடகைக் கார் பிடித்து வரச் சொன்னார்.புளிய மரத்தடியில் ஒரு விரிப்பை விரித்து எல்லோரையும் உட்காரச் சொன்னார்.வெற்றிலை போட்டுக் கொண்டே எல்லோருடனும் சாதாரணமாகச் சிரித்துப் பேச ஆரம்பித்தார்.
அப்போது அந்த வழியே சென்ற சிலர் கலைவாணரை அடையாளம் கண்டு பதட்டத்துடன் வந்து விபத்து பற்றி விசாரித்தனர். அவருக்கு காயம் ஏற்பட்டது குறித்து கவலை தெரிவித்தனர்.கலைவாணர் சிரித்துக் கொண்டே சொன்னார்,''ஒன்னுமில்லீங்க.எல்லோருக்கும் களைப்பாய் இருந்தது.எனவே வண்டியை மரத்தில் சாத்தி வைத்து விட்டு நாங்கள் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறோம்.''அந்த நிலையில் வேறு யாராலும் இப்படி நிதானமாகப் பேச முடியுமா?அது தான் கலைவாணர்!

தண்டனை

பிரெஞ்சுக்காரரான வால்டேர் ஒருமுறை நாடு கடத்தப்பட்டு இங்கிலாந்தில் தங்கி இருந்தார்.அப்போது இங்கிலாந்தில் பிரெஞ்சுக்காரர்களுக்கு எதிரான மனோநிலை மக்களிடம் இருந்தது.ஒரு நாள்  அவர்ஒரு தெரு ஓரமாய் நடந்து போய்க் கொண்டிருந்தார்.அப்போது ஆங்கிலேயர்கள் கூட்டமாய் அவ்வழியே வந்தனர்.வால்டேரைப் பார்த்தவுடன்,''அதோ,ஒரு பிரெஞ்சுக்காரன் போகிறான்.அவனைத் தூக்கிலிடுங்கள்,''என்று கத்திக் கொண்டே அவரை சூழ்ந்து கொண்டனர்.வால்டேர்  அந்தக் கூட்டத்தினரைப் பார்த்து அமைதியாகச் சொன்னார்,''இங்கிலாந்தின் பெருமக்களே!நான் பிரெஞ்சுக்காரன் என்பதால் என்னைக் கொல்ல வேண்டும் என்று விரும்புகிறீர்கள்.ஒரு ஆங்கிலேயனாகப் பிறக்காமல் ஒரு பிரெஞ்சுக்காரனாகப் பிறந்ததே பெரிய தண்டனை என்று நான் எண்ணுகிறேன்.இந்தத் தண்டனை போதாதா?இதற்கு மேலும் ஒரு தண்டனை அவசியம் என்று நினைக்கிறீர்களா?''அவருடைய சமயோசிதமான பதிலைக் கேட்டுக் கூட்டம் ஆர்ப்பரித்தது.அவர் த்ங்குமிடத்திற்குப் பத்திரமாக அழைத்து சென்றார்கள்.

மூளை

ஒரு பெரிய வழக்கு. அதில் சி.ஆர்.தாஸ்,நார்ட்டன் துரை ஆகியோர் எதிர் எதிர் வழக்கறிஞர்கள்.ஒரு முறை சி.ஆர்.தாஸ் வாதம் செய்து கொண்டிருக்கையில் நார்ட்டன் எழுந்து துடுக்காக,''மிஸ்டர் தாஸ்!ரொம்பப் பேச வேண்டாம்.உம்மை என் சட்டைப் பாக்கெட்டுக்குள் போட்டுக் கொள்வேன்,''என்றார்.உடனே தாஸ்,    ''அப்படிச் செய்தால் உம்முடைய தலையில் இருப்பதை விட உமது பாக்கெட்டுக்குள் அதிக மூளை இருக்கும்.''என்றாராம்.

கூச்சல்

உலகப் புகழ் பெற்ற எழுத்தாளரான சார்லஸ் லாம்ப்,முதல் முதலாக நாடகம் ஒன்றை எழுதி முடித்தார்.நாடகம் நடந்தது.கூடியிருந்த மக்களுக்கு நாடகம் பிடிக்க வில்லை.கூச்சலிட்டனர்.கூட்டத்தினர் கூச்சலிட்ட போது சார்லஸ் லாம்பும் சேர்ந்து கூச்சலிட்டார்.கூட இருந்த நண்பர்,''நீங்களும் ஏன் கூச்சல் போடுகிறீர்கள்?''என்று கேட்டார்.லாம்ப் கூறினார்,''இல்லாவிடில் இந்த நாடகத்தை எழுதிய ஆசிரியர் நான் தான் என்று கண்டு பிடித்து உதைத்திருப்பார்களே?''

மிருகம்

வஞ்சனையாலும் சூதினாலும் சமயத்துக்கேற்ப பல வித கபடங்கள் செய்து ஜீவிப்பவன் நரி; ஊக்கமில்லாமல் ஏதேனுமொன்றை நினைத்துக் கொண்டு மனம் சோர்ந்து தலை கவிழ்ந்து உட்கார்ந்திருப்பவன் தேவாங்கு;தர்மத்திலும் புகழிலும் விருப்பமில்லாமல் அற்ப சுகத்திலே மூழ்கிக் கிடப்பவன் பன்றி; சுதந்திரத்தில் இச்சை இல்லாமல்,பிறர்க்குப் பிரியமாய் நடந்து கொண்டு அவர்கள் கொடுத்ததை வாங்கி வயிறு வளர்ப்பவன் நாய்; பிறரது அக்கிரமத்தை நிறுத்த முடியாமல் தனது மந்த குணத்தால் பொறுத்துக் கொண்டிருப்பவன்  கழுதை;தான் சிரமப்படாமல் பிறர் சொத்தை அபகரித்து உண்ணுபவன் கழுகு.
                                                       --மகா கவி பாரதியார்.

தள்ளாதவன்

கி.வா.ஜ.வும் அவர் நண்பர்களும் காரில் சென்று கொண்டிருந்தனர்.வழியில் கார் நின்று விட்டது.;;சரி,இறங்கித் தள்ளுங்கள்,''என்றார் ஓட்டுனர் கி.வா.ஜ.வும் இறங்கித் தள்ளச் சென்ற போது மரியாதை காரணமாக ''நீங்கள் சும்மா இருங்கள்,''என்றார் காரின் சொந்தக்காரர்.கி.வா.ஜ.,கேட்டார்,''ஏன்,நான் தள்ளாதவன் என்று நினைக்கிறீர்களா?''

கெளரவம்

நெப்போலியன் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் ஒரு பெண்மணி பேசும் போது,''ரஷ்யாவில் நாங்கள் சண்டை போடுவது என்றால் அது கௌரவத்திற்காகவே,''அடுத்துப் பேசிய நெப்போலியன்,''அது உண்மை தான் அம்மணி!இல்லாத ஒன்றிற்காகத்தானே எல்லோரும் சண்டையிடுவார்கள்,''என்று சொன்னாராம்.

நீங்கள் யார்?
சார்லஸ் லாம்ப் ஒரு முறை பேசிக் கொண்டிருந்தார்.கூட்டத்தினர்,''ஷ்ஷ்ஷ்.....'' என்று ஓசைப் படுத்தினார்கள்.லாம்ப் கூட்டத்தைப் பார்த்து,''பாம்பு,வாத்து,முட்டாள் மூவரும் தான் இம்மாதிரி ஒலி எழுப்புவது உண்டு.மேடைக்கு வந்து நீங்கள் யார் என்பதை அறிமுகப் படுத்திக் கொள்கிறீர்களா?என்றார்.

பெருக்க வேண்டும்

கி.வா.ஜ வீட்டில் விசாலம் என்ற வேலைக்காரி இருந்தாள்.ஆள் கொஞ்சம் பருமன்.ஒரு நாள் கி.வா.ஜ.,ஒரு நண்பருடன் தரையில் அமர்ந்து சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருந்தார்.''என்ன இது?விசாலம் பெருக்க வேண்டும்.நீங்கள் இப்படி உட்கார்ந்திருக்கிறீர்களே!''என்றார் கி.வா.ஜ.வின் மனைவி.''விசாலம் இன்னுமா பெருக்க வேண்டும்?''என்று ஒரு போடு போட்டார் கி.வா.ஜ

பயனிலை

தமிழ் ஆசிரியர் திருசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களிடம் தொடர்ந்து பாடம் கேட்ட சீடர் ஒருவர்,பலமுறை சொல்லிக் கொடுத்தும் பாடம் சரியாகக் கேட்காமல் ஒரு நாள்,''எழுவாய்,பயனிலை என்றால் என்ன?'' என்று கேட்டார். பிள்ளையவர்களுக்குக் கோபம் வந்து விட்டது.உடனே அவர்,''நீ இங்கிருந்து எழுவாய்!உன்னால் ஏதும் பயனிலை,''என்றதுமே சீடன் ஓடி விட்டான்.