இன்றைய தினம்

இன்றைய தினத்தையே நோக்குங்கள்.
    ஏனென்றால் அதுதான் வாழ்வின் ஜீவன்.
நேற்று என்பது வெறும் கனவாக இருந்தது.
    நாளை என்பதோ ஒரு மனத் தோற்றம்தான்.
இன்றைய தினத்தை நன்றாக வாழ்ந்தால்
    நேற்றைய தினம் ஒரு அற்புதமான கனவு.
நாளைய தினம் நம்பிக்கை நிறைந்த
    மனத்தோற்றமாகவும் மாறும்.ஆதலால்
இன்றைய தினத்தை நன்றாக நோக்குங்கள்.
    அது நம் விடியற்காலை வணக்கமாகட்டும்.
                                    --காளிதாசர்.